பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் போதைக்கு அடிமையானவர்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது.
இந்த தேசத்தை காக்க சீக்கிய மதத்தினை தோற்றுவித்து, அதனால் முகலாய கொடுங்கோலர்களின் சித்திரவதைக்கு உள்ளான சீக்கிய குருமார்கள் செய்த தியாகங்கள் எல்லாம் வீண் ஆகிவிடும் போலிருக்கிறது.
இராணுவத்தில் பணி புரியும்போது தங்கள் உயிரை தியாகம் செய்து இந்த நாட்டை காத்த ஆயிரக்கணக்கான சீக்கிய வீரர்களின் தியாகங்கள் வீணாகி விடும் போலிருக்கிறது.
பஞ்சாபிய விவசாயிகள் வன்முறையில் இறங்கி விட்டனர். இதுவரை ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான தொலைதொடர்பு கோபுரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன . இதனால் பஞ்சாப் முழுவதும் தொலைதொடர்பு மற்றும் இணையவசதி பாதிக்கப்பட்டுள்ளது .
மாநிலத்தில் முக்கிய தொழில் கேந்திரமாக உள்ள லூதியானா மற்றும் ஜலந்தர் நகரங்களில் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன .
விவசாயிகள் போராட்டத்தினால் நவம்பர் 20 வரை ரூபாய் 30,000 கோடி வரை பஞ்சாப் மாநிலத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது . இன்றைய நிலையில் இது ஒரு லட்சம் கோடியை தாண்டி இருக்கக்கூடும். விவசாயிகள் ஏற்படுத்தியுள்ள மறியல் போராட்டத்தினால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கு பொருட்கள் உள்ளே செல்வதும் வெளியே வருவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தினாலும் கடந்த சில வாரங்களில் அவர்கள் காட்டிய ஆக்ரோஷத்தினாலும் தொழிற்சாலைகள் பஞ்சாப் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல உள்ள நிலை ஏற்படும். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது.கடந்த சில பத்தாண்டுகளில் குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.
1990கள் வரை பஞ்சாப் மாநிலம் தனிநபர் வருமானத்தில் பிற மாநிலங்களைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. இதற்கு காரணம்,1960களில் நடைபெற்ற பசுமை புரட்சி ஆகும். ஆனால், 1991இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பின், இந்தியா, விவசாய பொருளாதாரத்தில் இருந்து சேவைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்டு மாறியது முதல் பஞ்சாப் மாநிலம் பொருளாதரத்தில் பின்தங்கிவிட்டது.

மேலே காணும் அட்டவணையில் பஞ்சாப் மாநிலத்தில் தனிநபர் வருமானம் எந்த அளவிற்கு மற்ற மாநிலங்களை விட பின்தங்கி உள்ளது என்பதனை அறியலாம். இன்றைய நிலையில் அரியானா மாநிலத்தில் தனி நபர் வருமானம் பஞ்சாப் மாநிலத்தில் தனிநபர் வருமானத்தை விட ஒன்றரை மடங்கு ஆக உள்ளது. தவிர, பஞ்சாப் மாநிலம் முக்கிய தொழில் பிரிவுகளான வேளாண்மை , உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மிகவும் பின்தங்கி உள்ளது.
வேளாண்மை:
கடந்த சில வாரங்களாக, பீகார் மாநிலத்தில் வேளாண் துறை வளர்ச்சி பற்றி வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் பேசிவருகிறார்கள். பீகார் மாநிலத்தில் 2006 -லேயே வேளாண் உற்பத்தி சந்தை குழு எனப்படும் ”மாண்டிகள்” ஒழிக்கப்பட்டு விட்டதால் இன்னமும் பீகாரில் வறுமை நிலவுகிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். கடந்த 15 வருடங்களில் பீகார் மாநிலத்தில் வேளாண் துறை வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. இது தேசத்தின் சராசரி வளர்ச்சியான 3 சதவீதத்தை போல் மூன்று மடங்காகும் . அதேசமயம்,பஞ்சாப் மாநிலத்தில் வேளாண்துறை வளர்ச்சியான இரண்டு சதவீதத்தை போன்று நான்கு மடங்காகும்.
தவிர, கோதுமை உற்பத்தியில் மத்திய பிரதேசம் பஞ்சாப்பை பின்னுக்கு தள்ளி, நாட்டிலியே முதலிடத்தில் உள்ளது. அதே போல், அரிசி உற்பத்தியிலும் மேற்கு வங்கம் பஞ்சாப்பை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
தொழில்துறை:
கடந்த இருபது-முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தொழில்துறையில் அதிவேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கும் சமயத்தில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளில் தொழில்கள் மூடப்பட்டு வந்துள்ளன.
உற்பத்தி மையங்களான ஜலந்தர், குருதாஸ்பூர், மண்டி கோபிந்த்கர் மற்றும் ஜலந்தர் ஆகியன தொழில்துறையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாமையை ஆகும். அண்டையில் உள்ள இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தொழில் தொடங்குவதற்கான வசதிகளையும் மற்றும் சூழ்நிலைகளையும் அதிகப்படுத்தி ஊக்கத்தொகைகளையும் கடன் வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்ற சமயத்தில் பஞ்சாப் மாநிலம் இவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளது.
சேவைத்துறை:
நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களும் தகவல் தொழில்நுட்ப சேவை துறையினை ஈர்த்து வரும் சமயத்தில், பஞ்சாப் அரசு கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமமாக இருந்த அரியானா மாநிலத்தின் குர்கான் தற்போது வட இந்தியாவின் சேவை மையமாக மாறியுள்ளது. அதேபோன்று சிறிய தொழில் நகரமாக 1980களில் இருந்து வந்த நொய்டா, தற்போது பெரிய தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்தியாவின் மிக அழகிய,நன்கு பராமரிக்கப்பட்டு வரும் சண்டிகர் நகரம் கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு சேவை துறையையும் ஈர்க்கவில்லை. இதற்கு காரணம்,பஞ்சாப் அரசு அலட்சியப் போக்கே ஆகும்.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவிலேயே அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதத்தினை கொண்டிருக்கிறது.அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீத அளவிற்கு அம்மாநிலம் கடன் பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்தில் மிக குறைந்த அளவே செலவிடப்படும் மாநிலமாக அது உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில் தேசத்தின் மரண விகிதத்தை போல் இரண்டு மடங்கு மரணம் பஞ்சாபில் சம்பவித்துள்ளது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் சதவிகிதமும் பஞ்சாப்பில் அதிகம்.இதற்கு காரணம், இளைஞர்களில் 18 சதவீதத்தினர் குடி மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் ஆக உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. சமூக சேவைகள் மோசமான நிலையில் உள்ளன.தொழிற்சாலைகள் பஞ்சாப்பை விட்டு வெளியேறுகின்றன. இந்த நேரத்தில் மாநிலத்தின் விவசாயிகள் ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதன் மூலம் மேலும் பல தொழிற்சாலைகள் மாநிலத்திலிருந்து வெளியேறப் போகின்றன.
ஆக, பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதார சீரழிவு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
நன்றி: tfi முகநூல் பதிவு.













