ஜனவரி 1, 2021 முதல் புதிய காசோலை நடைமுறை.
ரூ.50000 க்கு மிகும் காசோலை பரிவர்த்தனைகளுக்கு இரட்டை சரிபார்ப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி வரும் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
#Positive_Pay – பாசிட்டிவ் பே என்று இது அழைக்கப்படுகிறது.
ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான காசோலையை வழங்குபவர் பெறுநர் விபரங்களான பெயர், தேதி, தொகை போன்றவற்றை SMS, இணையம், செயலி அல்லது ATM வழியே முன்பே தெரிவிக்க வேண்டும்.
காசோலை வழங்கும் நபர் விருப்பத்தின் பெயரில் தற்போது இதை செயல்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில் ரூ.5 இலட்சத்திற்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு இதனைக் கட்டாயமாக்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இது நிர்பந்தமாக மாற வாய்ப்புகள் அதிகம்.
அப்படி நடக்கும் பட்சத்தில் சரியான தகவல் இல்லாமல் ரொக்கமாக்க வழங்கப்படும் காசோலைகள் திரும்பும், நிராகரிக்கப்படும். வங்கிகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் சுற்றறிக்கை சொல்கிறது.
முக்கியமாக இக்காசோலை பரிமாற்றங்களில் ஏதாவது சிக்கல் நிகழ்ந்தால் வாடிக்கையாளர் Positive Pay ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் மட்டுமே Dispute Resolution Mechanism எனும் தீர்வுக்கு முன்னெடுக்க இயலும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை NPCI மேற்கொண்டு உள்ளது. நண்பர்கள் தயாராக இருக்க வேண்டுகிறேன்.














