விவசாயிகளின் நீண்டகால தலைநகர் முற்றுகைப்போராட்டங்கள் பற்றிய வழக்குகள் விசாரணையின் போது தலைமை நீதிபதி தப்லீகி ஜமாத் அமைப்பினரால் கோவிட் 19 பரவியதைப் போன்றதொரு சூழ்நிலை ‘விவசாயிகளின் போராட்டத்திலிருந்தும் எழும் … விவசாயிகள் கோவிட் -19 இலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை … என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்,’ என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கவலையை வெளிப்படுத்தினார்.
.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட் -19 தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் தப்லீகி ஜமாஅத் நடத்திய கூடுகைகள் கோவிட் 19 நோய்ப் பரப்புதலுக்கு வழிகோலியதாக வெகுஜனக் கருத்து தோன்றியது.
இப்போது நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் கூடியிருக்கும் வெகுஜனக் கூட்டங்கள் “தப்லிகி ஜமாஅத் சபையைப் போன்ற பிரச்சினைக்கு” வழிவகுக்கக்கூடும் என்று உச்சநீதிமன்றத்தின் அச்சத்திற்கு இந்திய தலைமை நீதிபதி சரத் ஏ. போப்டே கவலை தெரிவித்தார்.
“விவசாயிகளின் போராட்டத்திலிருந்தும் இதே பிரச்சினை எழும் … அவர்கள் COVID-19 இலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை … என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைமையிலான தலைமை நீதிபதி போப்டே மத்திய அரசின் சார்பாக வாதாடும் ஜெனரல் துஷர் மேத்தாவைக் கேட்டுக் கொண்டார்.
“நாங்கள் என்ன நிலவரம் என்பதை கண்டறிந்து சொல்கிறோம்” என்று அதற்கு திரு மேத்தா பதிலளித்தார்.
நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்திருந்த போதும், வீரிய வகையிலான கொரோனா உலகின் பல பகுதிகளில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பயணிகள் மூலமாக நுழைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அளவுக்கதிகமான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் உள்ளது என்பது குறிப்பிடாத தக்க அம்சமாகும்.
பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வரும் சூழலில் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டுட்டு இல்லம் திரும்புவது நல்லது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரைவில் நல்லதொரு வழிகாட்டும் என்று நாட்டின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் நினைக்கிறார்கள்.















விவசாய சட்ட எதிர்ப்பாளர்கள் சட்டத்தை வாபஸ் பெறவேண்டுமென்ற ஒரே நோக்கோடு போராட்த்தில் ஆழம் தெரியாமல் குதித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. மேலும், வாபஸ் வாங்குவதை தவிர, மற்ற நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருந்தும்,, போராட்டக்காரர்கள் சற்றும் இறங்கி வராதது அவர்கள் கவுரவச் பிரச்சனை என்ற மாயச் சுழலில் மாட்டிக் கொண்டு விட்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.