கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி (NDA) தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது சிலருக்கு அதிர்ச்சியையும் பலருக்கு ஆச்சரியத்தையும் தந்தது.
தங்களுக்கென்று பிடிவாதமான செக்கூலர் கோட்பாடுகளும் பொதுவுடைமை கொள்கைகளும் கொண்ட கூட்டம் இந்த தேர்தலில் நிலைகுலைந்து போனது.இந்தக் கூட்டம் ஒரு புறம் போலி பொதுவுடைமை பேசிக்கொண்டே மறுபுறம் ஏழைகளை எள்ளி நகையாடும் அவர்களுக்குஏழ்மை நிலையிருந்து படிப்படியாக உயர்ந்து பிரதமரான மோடியின் வெற்றி எரிச்சலையே தந்தது.
எப்படியும் 2019 ல் anti incumbencyயில் பாஜக தோற்கும் என மனப்பால் குடித்தவர்களுக்கு மீண்டும் பாஜக ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் அமைந்தது அதிர்ச்சியே.ராஜ்ய சபாவிலும் பலம் கூடியதுகாங்கிரசை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு தள்ளிவிட்டது.அதுதான் காங் இன்று வீதியில் போராடுகிறது.
எதிர்கட்சிகள் மட்டுமல்லஅரசியல்வாதிகளும் போலீஸ்,சட்டம்,நிர்வாகம்,கல்வித்துறை,ஊடகம் போன்ற துறைகளில் இருந்த அவர்களின் நட்பு வட்டாரமும் எதார்த்தத்தை உணரத்துவங்கியது.
காங்கிரஸின் வீழ்ச்சி கண்கூடாகத்தெரிகிறது.
RJD,SP,DMK,BSP எல்லோரது நிலையும் இதுவே.
தொடர்ந்து கடுமையாக பாஜகவை விமர்சிக்கும் திரிணமூல் காங்கிரஸின் நிலமை இந்தத் தேர்தலில் தெரியவரும்.
ஒருவேளை மமதா தோற்றால் பெரிய கோட்டையே கைவிட்டுப் போனதாகக் கொள்ளலாம்.
மகாராஷ்ட்ரத்தை பாஜக மீண்டும் கைப்பற்றினாலோ அஸாம்,தமிழகம்,புதுவை தேர்தல் பாஜகவுக்கு சாதகமானாலோ அதன் தாக்கம் 2024 பொதுத்தேர்தலில் தெரியும்.
காங்கிரஸின் rebel G 23 தலைவர்கள் அணி காந்தி குடும்பத்திற்கு குடைச்சல் கொடுக்கிறது.
படிப்படியாக சிதைந்து வருகிறது நேருவின் சித்தாந்தம்.
ஆர்டிகிள் 35A,370 அதிரடியாக நீக்கப்பட்டு அளவுக்கதிகமாகன சிறுபான்மை பாசம், இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டுப்படுத்தப்பட்டது.
அடுத்து வரலாற்று சாதனையாக அயோத்தி விவகாரம் முடிவுக்கு வந்தது.வழக்கு ஹிந்துக்களுக்கு வெற்றி.உண்மைக்கு வெற்றி.
தொல்பொருள் ஆய்வாளர் K.K.Muhammedன் ஆராய்ச்சியில் பாபர் மசூதி ஹிந்து கோவில் மீது தான் கட்டப்பட்டது என நிரூபணமானது.
பிரம்மாண்டமான கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
இது ஹிந்துத்வா கொள்கையின் சிறு மைல்கல்.ஏனெனில் அடுத்தடுத்து மதுரா, காசி கோயில் மீட்பு, uniform civil code என நீளும் பட்டியல் 2024ல் கூட பாஜகவுக்கு பிரகாசமான வாய்ப்பளிக்கும்.
டிஜிட்டல் இந்தியா, ஆத்மநிர்பர்,மின்சார கட்டமைப்பு,தடையில்லாத தண்ணீர்,LPG வசதி,பாதுகாப்பு பலம்,கட்டமைப்பு,நிலம்,பொருளாதாரம்,விவசாய மேம்பாடு GDP, என எல்லாம் ஏறுமுகமே.
முக்கியமாக விவசாயம் சீரமைக்கப்படவேண்டியது அவசரம்.
இது போக GST மற்றும் பாதுகாப்பு துறையில் தற்சார்பு , மருந்து தயாரிப்பில் முன்னேற்றம் கோவாக்சின் மூலமாக என வெற்றி தான்.
விவசாய சீர்திருத்தங்கள் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.60%மக்கள் விவசாயத்துடன் தொடர்புடையவர்களே.
ஆனால் நூறு நாட்களாக 50,000 தரகர்களால் நடத்தப்படும் இந்த போராட்டத்தால் பஞ்சாப் விளைபொருட்களான நெல்,கோதுமையின் தரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது.அதிகமான நிலத்தடி நீர் மற்றும் உரம் உபயோகத்தால் உப்புத்தன்மை அதிகரித்தது.
MSP என்ற ஆதார விலையைக் கறக்க தேவைக்கு அதிகமாக உற்பத்தியை பெருக்குகிறார்கள்.2.5%கமிஷன் கிடைக்க வழி தேடுகிறார்களேயன்றி, வேறு பொருட்கள்,காய்கறிகள் விளைவிக்க ஊக்கப்படுத்துவதில்லை.
1970 களில் நெல்,கோதுமைக்கு என தொடங்கிய MSP திட்டம் காலாவதியாகிவிட்டது.
மத்திய பிரதேசத்தில் தரமான நெல்,கோதுமை விளைகிறது.FCI யிடம் 200% கையிருப்பு உள்ளது.
மண்டி மற்றும் ஏஜண்டுகளின் பிடியிலிருந்து சிறு விவசாயிகளை விடுவிக்கவே மூன்று சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.எங்கே வேண்டுமானாலும் விற்க ஏதுவாக இணைய வசதி,சிறப்பு ரயில்கள்,ஒப்பந்த விவசாயம் போன்ற பல திட்டங்கள்.இவையெல்லாம் ஏஜன்டுகளின் பேராசையில் மண்ணைப் போட்டது.
அதனால் தான் கமிஷன் ஏஜன்டுகள் விடாமல் போராடுகிறார்கள்.இது தொடரும்.ஆனால் நேருவின் சித்தாந்தத்தில் மற்றொரு பகுதியும் விழுந்தது நிஜம்













