ஶ்ரீராமஜென்ம பூமி பூஜை நமது பிரதமர் திரு . நரேந்திர மோடிஜி அவர்களால் ஆகஸ்ட் 5ல் முடிந்த பிறகு நேற்று(ஆகஸ்ட் 20) மந்திர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்துள்ளது. இதற்காக மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கானக் கட்டுமானப் பணியை மேற்கொள்ளப்போவது CBRI ரூர்கீ, IIT மெட்ராஸ் மற்றும் லார்சன் டூப்ரோ (LAp&T) நிறுவனத்தைச் சார்ந்த பொறியாளர்கள்.
இந்தக் கோயிலானது பழைய பாரம்பரிய முறையில் பூமியதிர்ச்சி , புயல், மற்றும் பல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படும் என ஶ்ரீராமஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கட்டுமானப் பணியில் இரும்பு சம்பந்தபட்டப் பொருட்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அதற்குப்பதில் தாமிர (Copper) தகடுகள் உபயோகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். .
அந்த தகடானது 18 இன்ஞ் நீளம், 30 மிமீ அகலம் 3மிமீ ஆழமும் கொண்டதாக இருக்கும்கட்டிடம் முழுக்க இந்த தாமிரத்தகடுகளே இணைப்பாகப் பயன்படுத்த உள்ளதால் ராம பக்தர்களிடம் தாமிரத் தகடுகளை நன்கொடையாக வழங்கக் கேட்டுள்ளனர் கட்டிட நிர்மாண அமைப்பினர்.சுமோர் 10,000 தகடுகள் வரைத் தேவைப்படுமென்று தெரிய வருகிறது.
இதற்காகத் தகடுகளை வழங்குபவர்கள் தங்கள் குடும்பப் பெயர்கள்,அவர்களது இருப்பிடம், மற்றும் தங்களது சமூகம் போன்ற விவரங்களை அந்தத் தகடுகளில் பொறித்து வழங்கலாமென அறிவித்துள்ளனர்.இதன் மூலம் தேசம் முழுவதும் இந்தக் கட்டுமானப் பணியில் வேறுபாடின்றி இணைய முடியும் , பங்கு கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளனர்.கட்டிடப்பணி 36 மாதங்களிலிருந்து 40 மாதங்களில் முடிவுறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.விரைவில் பணிகள் சிறப்புற முடிந்து ஶ்ரீராமரின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.













