லடாக்கில் சீன துருப்புகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலைப்பாடு அந்த முழுப் பகுதியின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பகுதியின் சமீபத்திய அரசியல் வரலாறு நன்கு அறியப்பட்டதெனினும் இதில் வரலாற்று சீன பேரரசின் வாரிசாக தன்னை எண்ணும் சீனாவின் பார்வையில் உள்ள குறிப்பிட்ட முக்கியத்துவம் என்னவெனில், லடாக் மற்றும் சமஸ்கிருத உரைகளில் உத்தரக்குரு என்று அறியப்படும் சின்ஜியாங் ஆகிய இரண்டும் பல நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சார உலகின் ஒரு அங்கம் என்பதாகும்.
இப்பகுதி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கனிஷ்காவின் குஷன் பேரரசில் சேர்க்கப்பட்டிருந்தது. குஷன்களுக்கு பிறகு கி.பி.யின் முதல் ஆயிரம் ஆண்டுகள், தரிம் பள்ளத்தாக்கின் (தியான் ஷின் மலைகளுக்கு கீழ் உள்ள வடமேற்கு திபெத்) பொற்காலம் ஆகும். பல்வேறு இந்திய நகரங்கள் இந்த பட்டுப் பாதையில் செழித்தோங்கின. கஷ்கர், கோட்டன், துர்ஃபான், குச்சு, நியா மற்றும் லௌலான் ஆகிய நகரங்கள் இதில் அடங்கும்.
ராஜதரங்கினியில் குறிப்பிட்டு, வரலாற்றாசிரியர் ஆன்ட்ரே விங்க் தனது புத்தகம் ‘அல் ஹிந்த், த மேகிங் ஆஃப் இஸ்லாமிக் வர்ல்ட்’ என்பதில் ஏற்றுக்கொண்டபடி கர்கோட்டா மன்னர் லலித்தாதித்ய முக்தாபீடா அவர்களின் ஆட்சியின்போது சின்ஜியாங்கில் உள்ள தக்லமக்கன் நகரங்களும் கோபி பாலைவனங்களும் காஷ்மீரால் கைப்பற்றப்பட்டன.
சின்ஜியாங் (‘புதிய எல்லை’) என்னும் பெயர் ஒரு சமீபத்திய பழமையான சிறப்பாகும்; கிழக்கு துருக்கிஸ்தான் மற்றும் அல்ட்டிஷேஹர் (=6 நகரங்கள்) என்னும் பழைய பெயர்களை மாற்றி வைப்பதற்காக 1884இல் குவிங் சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர். இப்பகுதியின் மக்கள் உயுகுரர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பகுதியை உய்குரிஸ்தான் என்று அழைக்கப்படவே விரும்பினர் . உய்குர் அல்லது உயிகுர் என்பதற்கு துருக்கி மற்றும் சீன மொழியிலும் எந்த சொல்லியலும் இல்லை. ஆனால் அரேபிய எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது. கோட்பாட்டின் படி உயிகுர் என்பது உத்தரகுருவில் இருந்து எடுக்கப்பட்டது.
இமயமலைக்கு அப்பால் உள்ள நிலங்கள்- உத்தரகுரு (கிழக்கில்) மற்றும் உத்தரமத்ரா(மேற்கு) ஆகியன ஆரம்ப வேத புத்தகங்களில் இடம் பெறவில்லை. மகாபாரதத்தில் இமயமலைக்கு தெற்கே தக்ஷினாகுருவோடு உத்தரகுரு இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் தூரம் சபபர்வனில் அர்ஜுனனால் விவரிக்கப்பட்ட ராணுவ பிரச்சாரத்தில் இருந்து மதிப்பிடப்படலாம். அர்ஜுனன் வென் மலையைக் (ஸ்வேதபர்வதம்) தாண்டி ஹீமாவதத்தின் வழியே அணிவகுத்து ஹதக நாட்டில் உள்ள மனசரோவர் ஏரியை அடைகிறார். அங்கிருந்து ஹரிவர்ஷா என்னும் பகுதிக்குள் பிரவேசிக்கிறார். இதற்கு அப்பால் உள்ளது உத்தரகுரு.
உத்தரகுரு மக்கள் தங்கள் அரசர்களை வேத சடங்குகள்படி புனிதப்படுத்துகின்றனர் என்று அய்த்ரேய ப்ராமனா (8. 14)இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அதே புத்தகத்தில்(8. 23), வஷிஸ்த சத்யஹாவ்யா, ஜனம்தபி அத்யராதியை அய்ந்த்ர மஹாஅபிஷேக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் விளைவாக அவர் உலகையே வெல்ல புறப்பட்டார். குரு மக்கள் மேலும் பாரசீக நாட்டைக் கடந்து பின்னர் சோக்டியா, அனதோலியா ஆகியவற்றை கடந்து அதற்கு அப்பாலும் சென்றனர் என்று அறிஞர்கள் காண்கின்றனர். பிரதிபேயர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு குரு பிரிவினர் பாஹ்லிகர்கள் என்று அறியப்பட்டனர். ஏனெனில் பிரதீபனின் ஒரு மகன் பாஹ்லிகா என்று அழைக்கப்பட்டான். அப்பெயர் நுண்ணுயிரியை குறிக்கிறது.
வேத மக்களின் விரிவாக்கம்
வைவஸ்வதா மனுவிற்கு இக்ஸ்வாக்கு உட்பட ஒன்பது மகன்களும், இலா அல்லது இலிலா என்னும் ஒரு மகளும் இருந்தனர் என்று புராணக்கதை கூறுகிறது. இக்ஸ்வாக்கின் சந்ததியினர் சூர்யவம்சத்தின் அங்கத்தினர் ஆவர். இராமாயணத்தின் புகழ்பெற்ற இராமர் இவ்வழியில் பிறந்தவர்.
கந்ராவின் மகன் புதாவிற்கும் இலாவிற்கும் புரூரவாஸ் என்று மகன் இருந்தான் (ரிக்வேதத்திலும் 10.95.18). புரூரவாஸின் கொள்ளுப்பேரன் யயாதி. அவருக்கு ஐந்து மகன்கள்: யது, துர்வசு/ துர்வாசா, தேவயானி என்னும் தனது மனைவிக்கு பிறந்த மகன்கள், மற்றும் துருஹ்யு, அனு, பூரு ஆகிய மகன்கள் சார்மிஸ்தா என்னும் மனைவிக்கு பிறந்தவர்கள். பூரு வம்சம் குருக்ஷேத்திரத்தை சுற்றியுள்ள பகுதியை ஆண்டனர், வடக்கில் அனு வம்சமும், மேற்கில் துருஹ்யுவினரும், தெற்கில் யதுவினரும், துர்வசுவினர் யதுவினரின் கிழக்கிலும் ஆண்டனர்.
ரிக்வேதத்தின் பத்து அரசர்கள் (தசராஜ்னா) போரின் முடிவில் பூருவினர் மேற்கில் விரிவாகினர், அனுவினர் வெளிப்புறமாக ஆப்கானிஸ்தானுள் முன்னேறி துர்ஹுயுவினரை மேலும் மத்திய ஆசியாவிற்கு வடக்கு நோக்கி தள்ளினர். இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி இப்பழங்குடியினரின் இடம்பெயர்வு வாயு (பக்கம் 99.11-12), ப்ரஹ்மாந்தா(ப.3.74.11-12), மத்ஸ்யா(ப.48.9), விஸ்னு(ப.4.17.5), பாகவதம்(9.23.15-16 ) ஆகியவற்றில் அறியப்படுகிறது.
தாலமியின் புவியியல் ஒட்டோரக்கோரை (உத்தரகுரு) பழங்குடியினரை குறிக்கிறது . ஒட்டோரக்கோராவை ஒரு நகரமாகவும் ஒட்டோரக்கோராஸ் ஒரு ஆறாகவும் குறிக்கிறது. மற்ற அறிஞர்கள் தோக்கரி( துக்கரர்கள்), சமஸ்கிருத புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட ரிஷிகர்கள்( ரிசிகா) இருவரும் ஒன்றே என்று நம்புகிறார்கள்.
உத்தரகாருவில் உள்ள மொழிகள்
தரிம் பள்ளத்தாக்கில் பலர் சமஸ்கிருத மொழிகளான காந்தாரி மொழியை பேசினர். இது காஷ்மீரத்தோடு ஒத்த தார்திக் சாயல் கொண்டதோடு கோட்டனிய சகாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. இப்பகுதிக்கு மேற்கே பாக்டீரியாவிலும் அதற்கு அப்பாலும் உபயோகப்படுத்த பட்ட ஆரிய மொழிகள் அவெஸ்டன் மற்றும் பஹலாவி மட்டும் உள்ளடக்கியதல்ல. ஆனால் குஷன் பேரரசர் கனிஷ்காவின் ரபாதக் கல்வெட்டில் உள்ள மொழியையும் கொண்டதாகும்.
மத்திய ஆசியா முதல் ஐரோப்பாவில் உள்ள தனுபா வரை விரிந்த தரிம் பள்ளத்தாக்கின் மேற்கு வரை ஜத் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அவர்களுடைய மொழி பெரும்பாலும் இந்தோ-ஆரியமாக இருந்திருக்கக்கூடும். ஏனெனில் அது மாறுபட்டதாக இருந்திருந்தால் இந்தியாவில் இருந்த ஜப்பான் சமூகத்தினர் (சில மாநிலங்களில் 30 சதவிகிதத்திற்கு மேல் பெருந்தொகை கொண்டிருந்தது) தங்களது மொழியியல் தனித்தன்மையை தக்கவைத்திருக்க முடியும். வரலாற்றாசிரியர் அர்னால்டு ஜெ.டாயின்பி இவ்வாறாக எழுதுகிறார்: “டியூடோனிக் மொழி பேசும் ஸ்காண்டிநேவிய கோத் மற்றும் காவ்த் மக்கள், பஞ்சாபில் ஜத் மக்களை குறிக்கும் யுரேசிய புல்வெளியின் ஒத்த வகையான கேட்டா, தைசகேட்டா மற்றும் மாசகேட்டா போன்ற இந்தோ- ஐரோப்பா மொழி பேசும் பழங்குடியினர்களின் ஒரு சிறு பகுதியில் இருந்து வழி வந்தவர்கள் என்று அனுமானிப்பதில் கற்பனைக்கு அப்பாற்பட்டதல்ல “.
(தொடரும்)
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: நிர்மலா














